Thursday, March 28, 2024
Home » திநகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடை மேம்பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!!

திநகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடை மேம்பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!!

by Porselvi

சென்னை: தி.நகரில் நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடைபாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதன்மூலம் அப்பகுதியில் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும், என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் மிகப் பெரிய வர்த்தக நகரமாக விளங்கும் தி.நகருக்கு வருபவர்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி, தி.நகர் பேருந்து நிலையத்திற்கோ அல்லது பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கோ செல்வது என்பது தற்போதைய சூழலில் அவ்வளவு எளிதல்ல. ரங்கநாதன் தெரு, பனகல் பார்க், பாண்டிபஜார், சத்யா பஜார், உஸ்மான் சாலை என பரபரப்பான வணிக பகுதிக்கு வருவோரும் இவ்வழியாக தான் செல்ல வேண்டும். பொதுமக்கள் சாலை வழியாக நடந்து செல்வதால், தி.நகர் என்றாலே எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படக்கூடிய பகுதியாகவே உள்ளது.

இந்த நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில், 1,968 அடி நீளத்திற்கு நடை மேம்பாலம் அமைக்க, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.30 கோடி செலவில் திட்டமிடப்பட்டது. ஆனால், 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

*மாம்பலம் ரயில் நிலையத்தை மேட்லி சந்திப்புக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் அழகிய வடிவமைப்பில் 570 மீட்டர் நீளம், 4.2 மீட்டர் அகலமுள்ளளதாக அமைக்கப்பட்டுள்ளது.

*இந்தியாவில் மிக நீளத்தில் அமைக்கப்பட்ட நடைமேம்பாலம் இதுதான். இந்த நடைபாதை மேம்பாலத்தின் இரு முனைகளிலும் லிப்ட், பேருந்து நிலைய முனையில் ஒரு எஸ்கலேட்டர், மாம்பலம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு, பொது முகவரி அமைப்பு மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

*மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சக்கர நாற்காலி வசதி உள்ளிட்டவை உள்ளன.

*ஆகாய நடை மேம்பாலத்தின் அருகில் உள்ள மரங்களில் வண்ணப் பறவைகளின் உருவங்களும் வரையப்பட்டுள்ளது.

*நடைமேம்பாலத்தின் உட்புற பகுதிகளில் உள்ள தூண்களில் தமிழ்நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment

eight − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi