திருப்பூர் உடுமலை அருகே கொழுமம் கிராமத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது சமுதாய நலக்கூட கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அதே பகுதியை சேர்ந்த முரளிராஜா, மணிகண்டன், கவுதம், ஆகிய 3 பேர் உயிரிழ்ந்த நிலையில் இடிந்து விழுந்த மேற்கூரைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தொடர் கனமழையின் காரணமாக ஏற்கனவே பழுதடந்து இருந்து கொழுமம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூட கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் பேருந்திற்காக காத்திருந்த மணிகண்டன், கௌதம், முரளி ராஜன் ஆகியோர் உடல் நசுங்கி பலத்த காயங்களுடன் மீட்க்கபட்டனர். தொடர்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், 3 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது.