Thursday, June 19, 2025
Home செய்திகள்Latest திருப்பூர் மாவட்டத்தில் பாசனத்திற்காக, அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஆணை

திருப்பூர் மாவட்டத்தில் பாசனத்திற்காக, அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஆணை

by Arun Kumar

சென்னை: திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் உள்ள முதல் எட்டு பழைய இராஜ வாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசன நிலங்களின், 2025-2026-ஆம் ஆண்டு முதல் போக பாசனத்திற்காக, அமராவதி அணையிலிருந்து, அமராவதி ஆற்று மதகு வழியாக 07.06.2025 முதல் 20.10.2025 வரை 135 நாட்களில், 80 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில், வினாடிக்கு 300 கன அடி வீதம் 2073.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

 

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi