திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோடைவிடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் 72,579 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,067 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றுமுன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.3.74 கோடி காணிக்கையாக கிடைத்தது. நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளில் நிரம்பி வெளியில் வரை பக்தர்கள் காத்துள்ளனர். இவர்கள் சுமார் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து தரிசித்தனர்.