திருமலை: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிரித்துக்கொண்டே உள்ளது. அதன்படி நேற்று 82,746 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,078 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.85 கோடி காணிக்கை செலுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 7 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.