மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு தடை கோரிய வழக்கில் சுற்றுச்சூழல்துறை செயலாளர், அறநிலையத்துறை ஆணையர், கடலோர ஒழுங்காற்று குழுமம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2022 செப்டம்பர் முதல் ரூ.300 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூர் கோயில் பணிகளுக்கு தடை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை
0