சாய்பாபாவின் இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்
காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இருந்து இந்த விரதத்தை செய்யவே கூடாது.
பலகையில் மஞ்சள் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிறமலர்களால் ஆன மாலையை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். (பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும்) நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை ஸ்மரணை செய்யவும்.
முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும். சாய் விரத கதை, சாய் பாமாலை, சாய் பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.
விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.
விரத நிறைவு விதிமுறைகள் :
1) ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும் (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.
2) சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும் (5 அல்லது 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).
3) விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும்.
4) மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.
ரீ சாயி ஸ்மரணை
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
பக்தர் உம்மை அழைக்கின்றோம்!
விருப்பம் ஈடேற வேண்டும்!
பக்தி பலமுற வேண்டும்!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
துக்கம் போக்க வாரும் சாயி!
ஆனந்தம் அளிக்க வாரும் சாயி!
சேய் உம்மை அழைத்தேன் சாயி!
தாய் மனதோடு இலகுவாய் சாயி!
வாரும் சாயி,வாரும் சாயி!
கீர்த்தனம் சாயி, பூஜை சாயி!
வாழ்வும் சாயி, வளமும் சாயி!
ஆனந்தம் சாயி, செல்வம் சாயி!
அற்புதம் சாயி,அபயம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
ஷீர்டி வாசி எங்கள் சாயி!
பக்தரின் இனிய அன்பர் சாயி!
கருணைக் கடலே எங்கள் சாயி!
அருள் பார்வை பாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
கிழக்கும் சாயி,மேற்கும் சாயி!
வடக்கும் சாயி,தெற்கும் சாயி!
எத்திசையில் நீ இருந்தாலும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
ஹிந்து சாயி, முஸ்லிம் சாயி!
ஜீவன் சாயி,யாத்திரை சாயி!
யேசு சாயி, குருநானக் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
தர்மம் சாயி ! கர்மம் சாயி!
தியானம் சாயி!தானம் சாயி!
தூணிலும் சாயி துரும்பிலும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
திருப்தி சாயி முக்தி சாயி!
பூமி சாயி ஆகாயம் சாயி
சாந்தி சாயி ஓம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
சத்யம் சாயி, சிவம் சாயி!
சுந்தரம் சாயி ஈச்வரன் சாயி!
இரக்கம் சாயி எளியவர் சாயி!
அன்பு சாயி அமைதி சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
சக்தி சாயி பக்தி சாயி!
சிவன் சாயி விஷ்னு சாயி!
ப்ரஹ்மா சாயி பஞ்சபூதம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!