மதுரை: தூத்துக்குடி அழகப்பாபுரத்தில் மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களுக்குத் தேவையான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி தர ஊராட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் முறையாக குடிநீர் இணைப்பு தரக்கோரி கணேஷ்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்திருந்தார்.