Sunday, July 13, 2025
Home செய்திகள் திசைகளும் பலன்களும்!

திசைகளும் பலன்களும்!

by Porselvi

* கிழக்கு முகமாக நின்றுதான் பல் தேய்த்து, குளிக்க வேண்டும்.
* நதிகளில் புனித நீராடினால் நதிநீர் புறப்படும் திசை அறிந்து, அதை நோக்கி மூழ்கி குளிக்க வேண்டும்.
* கடவுள் விக்கிரகமோ, படமோ வைத்து பூஜிக்கும்போது நேர்முகமாக நமஸ்கரிக்க வேண்டும். தெற்கு முகமாக நமஸ்கரிக்க கூடாது.
* வாசலில் நேர் கோட்டில் கோலம் போட்டால் தெற்கிலிருந்து வடக்காக கோடுகளை இழுக்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு பார்க்க நின்று கொண்டு கோலமிட வேண்டும்.
* பூஜை செய்யும்போது, மந்திரங்கள் சொல்லும் போது பலகையில் அமர்ந்து, வடக்கு அல்லது கிழக்கு பார்த்து செய்ய வேண்டும்.
* தீபம் கிழக்கு நோக்கி இருப்பதே நலம்.
* வெளியே புறப்படும்போது சற்று வடக்கே நடந்து விட்டு புறப்படுவது நல்லது.
* இரண்டு பேருக்கு மேல் சாப்பிட்டால் வடக்கு முகம் பார்த்து அமரலாம். ஒருவர் மட்டும் என்றால் வடக்கு உகந்ததல்ல.
* புதுத் துணியை கிழக்கு முகம் பார்த்து அணிய வேண்டும்.
* குழந்தைகளை கிழக்கு பார்த்து உட்கார வைத்துதான் எந்த நல்ல காரியமும் செய்ய வேண்டும்.
* வேட்டி, புடவையின் தலைப்பு பாகத்தை தெற்கு பார்த்து உலர்த்தக் கூடாது.
* நாம் நடக்கும் பாதையில் துளசி செடி, பசு தென்பட்டால் நாம் வலமாக செல்வது நல்லது.
* மருந்தை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி உட் கொள்ள வேண்டும்.
* வடக்கு பக்கம் தலை வைத்து தூங்கக் கூடாது என்பது நமக்கு தெரிந்தது தானே.மேலே சொன்ன அனைத்தும் நம்பிக்கை அடிப்படையிலானதே. அவரவர் நம்பிக்கைக்கேற்ப கடைபிடிக்கலாம். இவற்றில் சில வகை மதங்கள் அடிப்படையிலும் கூட மாறுபடும்.
– அண்ணா அன்பழகன்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi