திருவெறும்பூர், நவ.6: திருவெறும்பூர் அருகே குடிப்பழக்கத்திற்கு அடிமையான கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் அருகே உள்ள மேலகணபதி நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் சுடலைகனி(34). கொத்தனார். கடந்த 7 வருடத்திற்கு முன் குடும்பத்தினருடன் சண்டையிட்டு தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.