விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே சிறுமியை எரித்து கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளனர். சிறுமதுரை கிராமத்தில் முன்விரோதத்தில் சிறுமியை எரித்து கொன்றதாக முருகன், கலியபெருமாள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகிளா நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளனர்.