டெல்லி: குட்காவுக்கு தடை விதித்து புதிய அரசாணை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து புதிய அறிவிக்கை வெளியிடலாம் என அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் அறிக்கையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.