அண்ணாநகர்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் அமாவாசை முன்னிட்டு இன்று காலை அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 500க்கும் முல்லை ஜாதிமல்லி ஐஸ் மல்லி 360 க்கும் கனகாம்பரம் 300க்கும் சாமந்தி 200க்கும் சம்பங்கி, பன்னீர்ரோஸ் சாக்லேட் ரோஸ் ஆகியவை 100க்கும் அரளி பூ 200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘’அமாவாசை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முகூர்த்த நாள், விசேஷ நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் பூக்களின் விலை படிப்படியாக குறையும்’ என்றார்.