பிரயாக்ராஜ்: இதுதொடர்பாக ஷ்ரேயா கேசர்வானி மற்றும் அவரது கணவர் தாக்கல் செய்த மனு அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி சவுரப் வாத்சவா, “தகுதியான ஒரு வழக்கில் நீதிமன்றம் தம்பதியருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க முடியும். ஆனால் பாதுகாப்பு கேட்டு ஷ்ரேயா கேசர்வானி தாக்கல் செய்துள்ள மனுவில், மனுதாரர்களுக்கு எந்தவிதமான கடுமையான அச்சுறுத்தல் உணர்வுகளும் இல்லை. எனவே பாதுகாப்பு கோர முடியாது. எந்த அச்சுறுத்தல் உணர்வும் இல்லாத சூழலில் தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், சமூகத்தை எதிர்கொள்ளவும் கற்று கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டார்.
பெற்றோர் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்து கொண்ட தம்பதி போலீஸ் பாதுகாப்பு கோர முடியாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
0