சென்னை : கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறியாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி உறுதி அளித்துள்ளனர். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், கூலி உயர்வு கேட்டு ஒரு மாதத்துக்கு மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு கோரி விசைத்தறி கூலித் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
விசைத்தறியாளர்கள் பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் : அமைச்சர்கள் உறுதி
0