Saturday, December 9, 2023
Home » சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றில் ₹90 கோடியில் கட்டப்படும் மேம்பாலத்துக்கான டெண்டர் பணிகள் முடிந்தது

சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றில் ₹90 கோடியில் கட்டப்படும் மேம்பாலத்துக்கான டெண்டர் பணிகள் முடிந்தது

by Lakshmipathi

* ஓரிரு வாரங்களில் பணிகள் தொடங்கும்

* நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர் : சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடைேய பாலாற்றில் ₹90 கோடியில் கட்டப்பட உள்ள மேம்பாலத்துக்கான ெடண்டர் பணிகள் முடிவடைந்தது. தொடர்ந்து ஓரிரு வாரங்களில் மேம்பால பணிகள் தொடங்கும் என ெநடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், வருங்கால வைப்புநிதி அலுவலகம், வனத்துைற, நீதிமன்றம், வட்டார போக்குவரத்து அலுவலகம், ஆவின் அலுவலகம் போன்ற முக்கிய அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அதேேபால், காட்பாடியில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வரக்கூடிய வகையில் ரயில் நிலையம், விஐடி பல்கலைக்கழகம், மாவட்ட விளையாட்டு மைதானம், முன்னாள் ராணுவவீரர் நல மருத்துவமனை மற்றும் கேன்டீன் போன்றவை இயங்கி வருகின்றன.

இந்த இரண்டு பகுதிகளுக்கும் சென்றுவருவதற்கு பிரம்மபுரத்தை சேர்ந்தவர்களும் சத்துவாச்சாரியை சேர்ந்தவர்களும் சுமார் 8 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டும். ஆனால், பாலாற்றின் இடையே பாலம் அமைக்கப்பட்டால், ஒரு கி.மீ தூரத்தில் பாலத்தை கடந்து எளிதாக செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றுவிடலாம். இதனால் போக்குவரத்து நெரிசல், பெட்ரோல் செலவு, காலநேரம் விரையம் தவிர்க்கப்படும். எனவே, சத்துவாச்சாரி- காங்கேயநல்லூர் இடையே பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகாலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் தரைப்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றத்தால், கிடப்பில் போடப்பட்டது.

சத்துவாச்சாரி காவல் நிலையம் அருகே போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள காலி இடத்திலிருந்து தொடங்கி காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் முடியும் வகையில் அறிவிக்கப்பட்ட, சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே புதிய பாலம் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்க ேகாரிக்கை எழுந்து வந்தது. பாலம் அமைக்க தாமதமானதால், மழைநீர், கழிவுநீர் இணைந்து செல்லும் கருநிற கழிவுநீரில் இறங்கி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை தொடர்ந்து வருகிறது.

எனவே, பொதுமக்கள் பாலம் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் சத்துச்சாரி- பிரம்மபுரம் மேம்பாலம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக ₹90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாலாற்றின் குறுக்கே இணைப்புசாலை அமைக்க சத்துவாச்சாரி பகுதியில் 32,775 சதுரமீட்டருக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதேபோல், பிரம்மபுரத்தில் 38,000 சதுரமீட்டர் அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இந்த பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு இழப்பீடு தொகையாக சுமார் ₹7 கோடி வரையில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகால பொதுமக்கள் கோரிக்கையின் பயனாக, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே மேம்பாலம் அமைக்க டெண்டர் திறக்கப்பட்டது. விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலம் அமைக்க சத்துவாச்சாரியில் 32,775 சதுரமீட்டரும், பிரம்மபுரத்தில் 38,000 சதுரமீட்டர் அளவிற்கும் நிலம் கையகப்படுத்தி, இழப்பீடாக ₹7 கோடி வரையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (நேற்று) பாலாற்றின் குறுக்கே 475 மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்க ெடண்டர் திறக்கப்பட்டது. இதில் குறைந்த விலைப்புள்ளி கோரியுள்ள நபர் தேர்ந்ெதடுக்கப்படுவார். ஓரிரு வாரங்களில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். பணிகள் தொடங்கப்பட்ட 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும், என்றனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?