தெலுங்கான: தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற காலை உணவுத் திட்டத்தை முன் உதாரணமாகக் கொண்டு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தெலங்கானா அரசு அமல்படுத்துகிறது. 1-10 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தை வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் அம்மாநில அதிகாரிகள் சென்னை வந்து இத்திட்டத்தை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.