ஈரோடு: பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி, சிலிண்டரில் டியூப் சொருகி காஸை சுவாசித்து வாலிபர் தற்கொலை செய்துள்ளார். ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு அடுத்த எஸ்கேசி சாலை முதல் வீதியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் மதிவதனசுந்தரம் (31). பொறியியல் பட்டதாரி. இவர் தந்தையுடன் மளிகை கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக சந்திரசேகரன், ஈரோடு கரூர் சாலை காந்திஜி வீதியில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், மதிவதனசுந்தரம் கடந்த சில நாட்களாக ஏதோ மனவேதனையில் இருந்தவர், கடந்த 13ம் தேதி தந்தை தங்கியிருந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் காஸ் சிலிண்டரில் டியூப் சொருகி, அதனை மூக்கில் வைத்து, பின்னர், பிளாஸ்டிக் கவரை முகத்தில் போட்டு, காஸை சுவாசித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, வெளியில் இருந்து வந்த சந்திரசேகரன், உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மதிவதனசுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.