செங்கல்பட்டு: செங்கல்பட்டு கக்கன் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (48). இவரது மகள் ரம்யா (23). கடந்த 2019ம் ஆண்டு செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் படித்து முடித்து, வேலைக்குச் செல்லாமல் ரம்யா வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை ரம்யா குடித்துள்ளார்.
பின்னர் ரம்யாவை மீட்டு முதலுதவிக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.