சென்னை: ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் நேற்று தொடங்கியதை அடுத்து 454 பேர் இடமாறுதல் உத்தரவுகள் பெற்றுள்ளனர். மேனிலைப் பள்ளிகளுக்கு 254 தலைமை ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு 200 தலைமை ஆசிரியர்களும் தாங்கள் விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்து இட மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். இதையடுத்து, அரசுப் பள்ளி, நகராட்சி உயர்நிலை மற்றும் மேனிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கவுன்சலிங் இன்று நடக்கிறது.
ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சலிங் 454 பேருக்கு இடஒதுக்கீடு ஆணை
0