தஞ்சை: தஞ்சை மாவட்டம் முதலைமுத்துவாரி ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். ரூ.20 லட்சம் மதிப்பில் சுமார் 3.5 கி.மீ. தொலைவிற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டத்தில் 1,060 கி.மீ. தொலைவிற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களை முதல்வர் பெற்றுக் கொண்டார்.