சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.