சென்னை : தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் ,மதுரை, ராமநாதபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் திருச்சி, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ,தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடி , மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.