Wednesday, April 24, 2024
Home » 26 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

26 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

by Neethimaan
Published: Last Updated on

சென்னை: 26 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

* ஐ.பி.எஸ். அதிகாரி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு

* சென்னையில் சிபிசிஐடி ஐ.ஜி.யாக டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னை பெருநகர (வடக்கு) சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையராக ஜெ.லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னையில் காவலர் நலப் பிரிவு ஐ.ஜி.யாக நஜமுல் ஹோடா நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஐ.ஜி.யாக ரூபேஷ் குமர் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்

* லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்

* டான்ஜெட்கோ கண்காணிப்பு பிரிவு டிஜிபியாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.யாக என்.காமினி நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னையில் சி.ஐ.டி-II பிரிவு காவல் கண்காணிப்பாளராக கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னையில் தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளராக அருண் பாலகோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னை பெருநகர வடக்கு பிரிவு துணை ஆணையராக பி.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னையில் மதுவிலக்கு குற்றப்பிரிவு மத்திய நுண்ணறிவுப் பிரிவு கண்காணிப்பாளராக ஆர்.பாண்டியராஜன் நியமனம்

* சென்னையில் அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக ஏ.ராதிகா நியமிக்கப்பட்டுள்ளார்

* ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு காவல் பயிற்சி அகாடமி டிஜிபியாக பதவி உயர்வு

* சென்னை பெருநகர பூக்கடை காவல் துணை ஆணையராக ஸ்ரேயா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக (நிர்வாகம்) வி.ஆர்.ஸ்ரீனிவாசன் நியமனம்

* சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீதேவி நியமிக்கப்பட்டுள்ளார்

* திருச்சி நகர் தெற்கு காவல்துறை துணை ஆணையராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்

* செங்குன்றம் துணை ஆணையராக பல்லா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்

* திட்டமிட்ட குற்றச் செயல் நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி.யாக சிறப்பு சி.ஐ.ஷ்.. பிரிவு எஸ்.பி. எஸ்.சரவணன் கூடுதல் பொறுப்பு

* சென்னை அடுத்த ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி துணை இயக்குனராக தீபா சத்யன் நியமனம்

* ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னையில் கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளராக சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்

* மாநில குற்ற ஆவணக் காப்பக காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்

* மதுரை நகர் தெற்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்

* கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் 7-வது பட்டாலியன் கமாண்டன்ட்டாக ஜெயந்தி நியமனம்

* சென்னை தெற்குச் சரக ஊழல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளராக வி.சரவணக்குமாருக்கு பதவி உயர்வு

* எஸ்.பி.யாக பதவி உயர்வு பெறும் வினோத் சாந்தாராம், சென்னையில் சிபிசிஐடி, சிறப்புப் பிரிவுகள் எஸ்.பி.யாக நியமனம்

* எஸ்பியாக பதவி உயர்வு பெறும் விஜேய கார்த்திக்ராஜ், சென்னையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக நியமனம்

* எஸ்.பி.யாக பதவி உயர்வு பெறும் வி.வி.கீதாஞ்சலி, சென்னையில் சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமனம்

* சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு ஆர்.பொன் கார்த்திக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

You may also like

Leave a Comment

20 − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi