சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மின் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய பொறியாளர்களுக்கு தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் தமிழகம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும். அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மீட்டர்கள் பழுதடைந்து உள்ளது. அதன்படி, பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.