சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.