சென்னை: திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாக செல்வதில் மகிழ்ச்சி. ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் எடுத்துக் கூற வேண்டும். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 10 நிமிடம் கலந்துரையாட வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
+
Advertisement
