தமிழ்நாடு அரசு, காவல்துறையின் நடவடிக்கையால் பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்களில் கஞ்சா பயிரிடப்பட்டாலும் தமிழ்நாட்டில் முழுவதுமாக கஞ்சா பயிரிடப்படுவது காவல்துறையினரால் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து பத்திரிகையாளர்கள் தகவல் அளித்தாலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.