சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ரூ.6,065 கோடியில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம், ரூ.17,154 கோடியில் 9.620 கி.மீ. நீளச் சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சாலை திட்டங்கள், மேம்பால பணிகளால் இந்தியாவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையிலும் சிறந்த மாநிலம் என புதிய வரலாறு படைக்கிறது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சாலை வசதிகள் மிக மிக முக்கியமாகும். நெடுஞ்சாலைத்துறையின் சில முத்திரைகள் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம்: 2021ம் ஆண்டில் தொடங்கப்பட்ட முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3,858 கோடி மதிப்பீட்டில் 448 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைகள், ரூ.2,207 கோடி மதிப்பில் 1,681 கி.மீ. நீளமுள்ள இரு வழித் தட சாலைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து ரூ.2,807 கோடி மதிப்பீட்டில் 383 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைப் பணிகளும், ரூ.709 கோடி மதிப்பீட்டில் 357 கி.மீ. நீளமுள்ள இரு வழித்தட சாலைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்: ரூ.17,154 கோடி மதிப்பீட்டில் 9,620 கி.மீ நீளமுள்ள சாலைப் பணிகள் மற்றும் ரூ.1,161 கோடி மதிப்பீட்டில் 996 பாலம், சிறு பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ரூ.731 கோடி மதிப்பில் 164 கி.மீ. நீளத்திற்கு நகர்ப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ரூ.662 கோடி மதிப்பீட்டில் 1,652 சாலைப் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. ரூ.1,330.70 கோடி பன்னாட்டு நிதி உதவியுடன் கூடிய திட்டங்கள் : சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ரூ.240.06 கோடியில் நக்கசேலம், குரும்பலூர் புறவழிச்சாலைகளுடன் கூடிய துறையூர் பெரம்பலூர் சாலை, ரூ.349.94 கோடியில் மோகனூர் நாமக்கல். சேந்தமங்கலம் ராசிபுரம் சாலை, ரூ.251.29 கோடியில் விருத்தாச்சலம் உளுந்தூர்பேட்டை சாலை, ரூ.238.90 கோடியில் தஞ்சாவூர் – மன்னார்குடி சாலை, ரூ.250.51 கோடியில் மேலூர் திருப்பத்தூர் சாலை ஆகிய 5 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ரூ.1372 கோடியில் 1049 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன: ரூ.17.04 கோடியில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை எரையூர் சாலை, செய்யாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ.90.96 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கல்லணையில் உயர்மட்டப் பாலம், ரூ.27.92 கோடியில் பெண்ணையாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ.58.64 கோடியில் சென்னையில், திருவொற்றியூர்- பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ.21.56 கோடியில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காஞ்சிபுரம் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ.33.76 கோடியில் ஈரோடு மாவட்டம் கீழ்பவானி கால்வாயின் குறுக்கே 8 உயர்மட்டப் பாலங்கள், ரூ.18.57 கோடியில் திருத்தணி-நாகலாபுரம் சாலையில் கொசஸ்தலையாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ.19.48 கோடியில் பருத்திப்பட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ.11.06 கோடியில் காலகம் ஆவுடையார்கோவில் சாலையில் மருதங்குடி ஆற்றின் குறுக்கே உயர் மட்டப் பாலம், ரூ.13.60 கோடியில் மன்னார்குடி-சேதுபாவசத்திரம் சாலையில் மகாராஜா சமுத்திரம் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ.19 கோடியில் மன்னடிமங்கலம் மற்றும் இரும்பாடி இடையில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ.36.50 கோடி மதிப்பீட்டில் சித்தூர்- திருத்தணி சாலையில் உயர்மட்டப்பாலம் முதலிய தரைமட்டப் பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாகக் கட்டப்பட்டுள்ளன, நபார்டு கடனுதவி மற்றும் மாநில நிதியுதவி திட்டத்தின் கீழ் நபார்டு அலகின் மூலம் ரூ1137.62 கோடியில் 278 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
ரூ.813.25 கோடியில் 8 சாலை மேம்பாலங்கள்: ரூ.93.50 கோடியில் கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலையில் காளியம்மன் கோயில் தெரு மற்றும் சென்னை புறநகரப் பேருந்து நுழைவு வாயில் சந்திப்பில் மேம்பாலம், ரூ.67 கோடியில் வேளச்சேரி- விஜயநகரம் சந்திப்பில் தரமணி இணைப்புச் சாலையிலிருந்து வேளச்சேரி புறவழிச்சாலை செல்லும் இரண்டாம் அடுக்கு பாலப்பகுதிப் பணி மற்றும் ரூ.78.49 கோடி மதிப்பில் வேளச்சேரி புறவழிச்சாலையிலிருந்து வேளச்சேரி- தாம்பரம் சாலையை இணைக்கும் முதல் அடுக்கு பாலப்பகுதிப் பணி, ரூ.95.21 கோடியில் மேடவாக்கம் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் பாலப்பகுதி, ரூ.53.12 கோடியில் மதுரை- தொண்டி சாலை மற்றும் மதுரை சுற்றுச் சாலை சந்திப்பு பல்வழிச்சாலையில் மேம்பாலம். ரூ.20 கோடியில் சென்னையில் இந்திரா நகர் சந்திப்பில் ‘U’ வடிவிலான மேம்பாலம், ரூ.140.49 கோடியில் கோயம்புத்தூர்- உக்கடம் ஆத்துப்பாலத்தில் சாலை மேம்பாலம் மற்றும் ரூ.265.44 கோடி மதிப்பில் உக்கடம்- ஆத்துப்பாலம் நீட்சிப்பணி ஆகிய சாலை மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
ரூ.1134.01 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 29 ரயில்வே மேம்பாலங்கள், ரயில்வே கீழ்பாலங்கள்: ரூ.52.98 கோடியில் அன்னனூர் அருகில் ரயில்வே மேம்பாலம், ரூ25.74 கோடியில் கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் கடம்பத்தூர்- திருவாலங்காடு ரயில் நிலையங்களுக்கிடையில் ரயில்வே மேம்பாலம், சென்னை-பொன்னேரிக்கரை காஞ்சிபுரம் சாலையில் ரூ.59.63 கோடியில் காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம், ரூ.37.12 கோடியில் ஊரப்பாக்கம் அருகில் வண்டலூர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்வே மேம்பாலம். ரூ.20.96 கோடியில் ஒலக்கூர் பீடர் ரயில்வே மேம்பாலம், கடலூர்- சித்தூர் சாலையில் ரூ.22.63 கோடி மதிப்பீட்டில் திருவெண்ணைநல்லூர் பரிக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம், பாண்டி- கிருஷ்ணகிரி சாலையில் ரூ.38.74 கோடியில் தண்டரை திருவண்ணாமலை ரயில் நிலையங்களுக்கிடையே ரயில்வே
மேம்பாலம்.
பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் ரூ.48.48 கோடியில் பொள்ளாச்சி- கிணத்துக்கடவு ரயில் நிலையங்களுக்கிடையே ரயில்வே மேம்பாலம், பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் ரூ.37 கோடியில் செங்கல்பட்டிலிருந்து- சென்னை செல்லும் பாலப்பகுதிப் பணி,
ரூ.24.80 கோடியில் சீனிவாச ராகவன் தெரு பாலப்பகுதிப் பணி, ரூ.60.13 கோடி மதிப்பீட்டில் சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் பாலப்பகுதிப் பணி முதலிய 29 இடங்களில் ரயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலங்களாகவும், கீழ்பாலங்களாகவும் அமைக்கப்பட்டு போக்குவரத்து இனிதாக நடைபெற வழிவகுத்துள்ளது திராவிட மாடல் அரசு. நடை மேம்பாலம் : தாம்பரத்தில் ரூ.6.29 கோடியில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.4061.71 கோடியில் ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைப் பணிகள் : ரூ.3.909.16 கோடியில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுத் திட்டத்தின் கீழ் 88 சாலை மற்றும் 16 பாலப்பணிகளும், ரூ.152.55 கோடியில் காலமுறை புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலையில் 8 சாலைப்பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொறியாளர்களுக்குப் பயிற்சிகள்: வளர்ந்து வரும் புதிய புதிய தொழில்நுட்பங்களைக் களத்தில் கடைப்பிடித்து சாலை – பாலப்பணிகள் சிறப்பாக நடைபெறப் பொறியாளர்களுக்கும். இதர அலுவலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 379 பொறியாளர்களுக்கும், 112 தொழில்நுட்பம் சாரா அலுவலர்களுக்கும், விரிவான பயிற்சித் திட்டத்தின் கீழ் 2,881 பொறியாளர்களுக்கும், மற்றும் 832 தொழில்நுட்பம் சாரா அலுவலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. ரூ.944.21 கோடியில் 812.8 கி.மீ நீளமுள்ள ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாகத் தரம் உயர்த்தும் பணிகள் : ரூ.331 கோடியில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 373 சாலை பாதுகாப்புப் பணிகள், ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8,076 கோடியில் 2,264 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் மற்றும் ரூ.694 கோடியில் 69 பாலம், சிறுபாலப் பணிகள் ரூ.763.80 கோடியில் 134 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றும் பணிகள் ரூ.375.32 கோடியில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் 32 உயர்மட்டப் பாலங்கள், ரூ.596.64 கோடியில் மாநில நிதி திட்டத்தின் கீழ் 19 உயர்மட்டப் பாலங்கள். ரூ.1791.23 கோடியில் கோயம்புத்தூரில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிப்பாளையம் வரை உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள்.
ரூ.621 கோடியில் சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிகள் ரூ.25.52 கோடியில் படப்பையில் சாலை மேம்பாலம் ரூ.190.40 கோடியில் மதுரையில் கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலம். ரூ.150.28 கோடியில் மதுரையில் மதுரை-தொண்டி சாலையில் சாலை மேம்பாலம். ரூ.2,105.49 கோடியில் 41 ரயில்வே மேம்பாலங்கள், ரயில்வே கீழ்பாலங்கள் கட்டும் பணிகள் ரூ.27.5 கோடியில் டைடல் பார்க் சந்திப்பில் “U” வடிவிலான மேம்பாலம் கட்டும் பணிகள் என பல்வேறு முக்கிய பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. ரூ.590.51 கோடியில் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டப் பணிகள்: ரூ.60.69 கோடியில் சென்னையில் சர்தார் படேல் சாலையுடன் ராஜீவ்காந்தி சாலை இணையும் மத்திய கைலாஷ் சந்திப்பில் சாலை மேம்பாலம்.
ரூ.314.48 கோடி மதிப்பீட்டில் மியாட் மருத்துவமனை முதல் முகலிவாக்கம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் ரூ45.50 கோடியில் மடிப்பாக்கம் அருகே வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி. ரூ.30.67 கோடியில் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு, செந்தில் நகர் சந்திப்பு ஆகிய இடங்களில் 2 நடை மேம்பாலங்கள். ரூ.139.17 கோடியில் உள்வட்டச் சாலையிலுள்ள ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணி முதலியன சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டப் பணிகளாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலின் ஆட்சியில் இத்தகைய பல சாலைத் திட்டங்கள், மேம்பாலப் பணிகளால் மற்ற துறைகளைப் போலவே இந்தியாவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையிலும் சிறந்த மாநிலம் என புதிய வரலாறு படைத்து வருகிறது.