சென்னை: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளனர்.