சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பு இடங்களை திரும்ப வழங்கக் கோரி தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை கடிதம் எழுதியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் வீணான நிலையில் இவ்வாண்டு 83 இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை திரும்ப வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.