Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ15.7 லட்சம் கோடி முதலீடு ஈர்த்த மகாராஷ்டிராவின் சாதனைக்கு பின்னால் தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி அன்பழகன்

சென்னை: டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பதினைந்து லட்சத்து எழுபதாயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து, மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தை பிடித்தது. இந்தியா மொத்தத்துக்குமான ரூ 20 லட்சம் கோடி அந்நிய முதலீட்டில் முக்கால்வாசி இந்த ஒரு மாநிலமே தட்டிக் கொண்டு போயிருக்கிறது. சத்தம் இல்லாமல் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் ஒரு தமிழ் ஐஏஎஸ் அதிகாரி. சத்தியமங்கலத்தில் பிறந்து, 2001ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் பி.அன்பழகன் ஐ.ஏ.எஸ் தான் அவர். மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் தலைமையில் அமைந்த புதிய அரசாங்கத்தில், தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட பொழுதிலிருந்து, எடுத்த முனைப்பும், தொழில் அதிபர்களின் நேரடி சந்திப்பும் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள்.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் எம்ஐடிசி, மின்சாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு துறை என தொழில் சார்ந்த துறைகளை தலைமையேற்று நடத்தியதும், கொரோனா காலத்திலும் எம்ஐடிசி வாயிலாக 10 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈட்டி கொடுத்த அனுபவமும் இப்போது கைகொடுத்திருக்கிறது என்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை சதவீதம் திட்டங்களாக முழுமை பெறும் என்று கேட்ட போது “90 சதவீதம் ஒப்பந்தங்கள் சாத்தியமாக்கப்பட்டுவிடும். அதற்கான வேலைகள் உடனடியாக தொடங்கிவிட்டன. மாநிலத்தின் பொருளாதார வரலாற்றில் இது ஒரு மைல் கல் சாதனை’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். ஒரு தமிழரின் முனைப்பும் உழைப்பும், அண்டை மாநிலங்களையும், அதிகாரிகளையும் அண்ணாந்து பார்க்க வைத்திருப்பதே உண்மை.