சென்னை: தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை அடியோடு ஒழிப்போம்; இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கஞ்சா நடமாட்டம் குறையவில்லை என பேரவையில் இபிஎஸ் பேசிய நிலையில் முதல்வர் பதில் அளித்தார். அப்போது, அதிமுக ஆட்சியில்தான் போதைப்பொருட்கள் மிகுந்த மாநிலமாக விட்டுச் சென்றீர்கள். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு இரவு பகல் பாராமல் போலீசார் பணியாற்றி வருகிறார்கள் என தெரிவித்தார்.