களக்காடு: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் காளீஸ்வரி (32). இவருக்கு திருமணமாகி 8 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் இவருக்கும், பரப்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் காளீஸ்வரி 17 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று களக்காடு கோவில்பத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார்.
அப்போது சிறுவனிடம் உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த சிறுவனின் தாயார், நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொ) ராஜகுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி காளீஸ்வரி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.