சென்னை: டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி ஆய்வு செய்கிறார். பாசனத்திற்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதி நீர் திறக்கப்பட உள்ள நிலையில் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் நடைபெறும் தூர்வாரும் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளார்.