சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணைக்கு ஆஜராக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் அனுப்பிய சம்மன் சீமான் வீட்டு கதவில் போலீசாரால் ஒட்டப்பட்டது. அப்போது சம்மனை கிழித்ததாக, அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். இந்த இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், அரசியல் உள்நோக்கில் எங்களை கைது செய்துள்ளனர். துப்பாக்கிக்கு உரிய அனுமதி இருப்பதால், ஆயுத தடுப்பு சட்ட பிரிவில் கைது செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருவரும் பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.
சம்மனை கிழித்த விவகாரம் சீமான் வீட்டு பாதுகாவலர், பணியாளருக்கு ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு
0