Saturday, April 20, 2024
Home » போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடைக்கால பானங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சங்கர் ஜிவால்

போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடைக்கால பானங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சங்கர் ஜிவால்

by Neethimaan

சென்னை: போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு 3 நாட்கள் கோடைக்கால பானங்கள் வழங்கும் நிகழ்ச்சியினை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமம், கோடை வெயிலின்போது சாலையில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியிலிருக்கும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை வெயிலை தணிக்க 3 நாட்கள் ‘‘Express Cares‘‘ என்ற பெயரில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்க முன் வந்தனர். அதன்பேரில், இன்று (24.05.2023) காலை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், தி நியூ எக்ஸ்பிரஸ் குழுமம் வழங்கவுள்ள குடிநீர் மற்றும் குளிர் பானங்களை போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு வழங்கி ‘‘Express Cares‘‘ முகாமினை துவக்கி வைத்தார்.

இன்று 24.05.2023 முதல் 26.05.2023 வரை, சென்னையில் வெவ்வேறு இடங்களில் இம்முகாம் மூலம் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படும் என காவல் ஆணையாளர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மூத்த பொது மேலாளர் சித்தார்த் சௌந்தாலியா, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சி. சரட்கர், போக்குவரத்து இணை ஆணையாளர் என்.எம்.மயில்வாகணன், போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

4 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi