நெல்லை: கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் நெல்லையில் ஒரு மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கனமழை காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் அரசு அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்தது. பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.