Thursday, April 25, 2024
Home » கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்

கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்

by Dhanush Kumar
  • தாம்பரம் – நெல்லை

ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25 ஆகிய 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் வழியாக நெல்லையை அடையும்.

  • நெல்லை – சென்னை எழும்பூர்

ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26 ஆகிய 5 நாட்கள் நெல்லையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூரை அடையும்.

  • நாகர்கோவில் – தாம்பரம்

ஏப்ரல் 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2 ஆகிய 11 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரயிலானது நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் அடையும்.

  • தாம்பரம் – நாகர்கோவில்

ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26, ஜூலை 3 ஆகிய 11 நாட்களில் தாம்பரத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் ரயிலானது இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.

  • திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர்

மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய 9 நாட்களில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும் ரயிலானது கொல்லம், கோட்டயம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், அரக்கோணம் வழியாக மறுநாள் மதியம் 12.45 மணிக்கு சென்றடையும்.

  • சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம்

மே 4,11,18, 25, ஜூன் 1,8,15, 22, 29 ஆகிய 9 நாட்களில் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

  • தாம்பரம் – திருநெல்வேலி

ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24 ஆகிய 5 நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போர்ட், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.

  • திருநெல்வேலி – தாம்பரம்

ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26 ஆகிய 5 நாட்களில் நெல்லையில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

  • தாம்பரம் – நாகர்கோவில்

ஏப்ரல் 21, 28, மே 5, 12, 19, 26 ஆகிய 6 நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியே மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

  • நாகர்கோவில் – தாம்பரம்

ஏப்ரல் 22, 29 மே 6, 13, 20, 27 ஆகிய 6 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என ரயில்வே துறை தகவல் அளித்துள்ளது.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi