சிவகாசி: பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்த முனீஸ்வரி என்பவரின் மகளின் படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்று கூறியுள்ளார். முனீஸ்வரியின் மகளுக்கு 2 நாட்களில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வீடு கட்டித் தரப்படும் எனவும் கூறியுள்ளார்.