Thursday, June 12, 2025
Home ஆன்மிகம் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் 352-வது ஆராதனை விழா!

ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் 352-வது ஆராதனை விழா!

by Kalaivani Saravanan

ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர்
ஸ்தோத்திரம்:

பக்தானாம் மானஸாம்போஜ பானவே
காமதேனவே
நமதாம் கல்பதருவே ஜெயீந்திர குரவே நம:

ஸ்ரீசுதீந்திர தீர்த்தர் ஸ்தோத்திரம்:

குஷாக்ர மதயே பானு த்யுதயே வாதிபீதயே
ஆராதித ஸ்ரீபதயே சுதீந்திர யதயே நம:

ஸ்ரீராகவேந்திர ஸ்தோத்திரம்:

பூஜ்யாய ராகவேந்திராய ஸத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம்
காமதேனவே

சென்னை நங்கநல்லூர் இடத்தில் மட்டும்தான் குரு பரம்பரை வரிசையில் அமைந்துள்ள மூன்று மிருத்திகா பிருந்தா வனங்களான ஸ்ரீவிஜயீந்திரர், ஸ்ரீசுதீந்திரர், ஸ்ரீராகவேந்திரர் ஆகியோரை தரிசிக்கலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த தட்சிண மந்திராலயத்தில், ஸ்ரீஹரி வாயு குருகளின் அனுக்கிரஹத்தை முன்னிட்டு நிகழும் ஸோபனக்ருத் நாம ஸம்வத்ஸரம் நிஜஸ்ராவண மாஸம், கிருஷ்ணபக்ஷ பிரதமை, துவிதியை, த்ருதியை 31.8.2023 பூர்வ ஆராதனை (வியாழக்கிழமை) 1.9.2023 மத்ய ஆராதனை (வெள்ளிக்கிழமை), 2.9.2023 உத்தர ஆராதனை (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களிலும், ஸ்ரீகுருசார்வபௌமர் அவர்களின் ஆராதனையை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆராதனை தினங்களில், கீழ்க்காணும் சேவைகளில் கலந்துகொள்ள விரும்புவோர் தட்சிண மந்திராலய பிருந்தாவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

அன்னதான சேவை,
ஆராதனை சம்பூர்ண சேவை,
புஷ்பாலங்கார சேவை,
அலங்கார பந்தி சேவை,
ஸ்வர்ண கவசம்
கனகாபிஷேகம்
சர்வ சேவா
ஹஸ்தோதகம்
பஞ்சாம்ருத அபிஷேகம்
பக்த மஹாஜனங்கள்!

அனைவரும் கலந்து கொண்டு, ஸ்ரீகுருராஜரின் அனுகிரஹத்திற்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi