கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற நான்கு பேரை இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கினர். மீனவர்களை தாக்கி ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர். காயமடைந்த ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் ஆகிய 4 மீனவர்கள் வேதாரண்யம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.