ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28ம் தேதிகளில் மீன்பிடிக்க சென்ற 10 படகுகள், 64 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது. மீனவர்கள் 64 பேரும் யாழ்ப்பாணம், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மீனவர்கள் அனைவரும் நேற்று இலங்கை போலீசாரால் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் படகின் உரிமையாளருடன் கைதான நான்கு மீனவர்களை மட்டும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மற்ற 22 மீனவர்களின் சிறைக்காவலை நவ.15 வரை நீட்டித்து உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் 4 பேர் தவிர மற்ற 22 மீனவர்கள் நேற்று மாலை மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். படகின் உரிமையாளர்கள் ஆஜரானால்தான் மற்ற மீனவர்கள் விடுதலையாக வாய்ப்புள்ளதாக இலங்கை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் இன்று தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இலங்கை சிறையிலிருந்த 4 மீனவர்கள் விடுதலை: 22 பேருக்கு காவல் நீட்டிப்பு
53