ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்கு படகில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலால், நேற்று மாலை மண்டபம் மற்றும் தங்கச்சிமடம் பகுதியில் ஒன்றிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக கரையில் நிறுத்தியிருந்த நாட்டுப்படகை சோதனை செய்தனர். இதில் கடத்தி வரப்பட்ட சுமார் 9 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.5 கோடி. அதை கைப்பற்றிய அதிகாரிகள், இதுதொடர்பாக தங்கச்சிமடத்தை சேர்ந்த தேவசகாயம், டேனியல், ஸ்ரீதர், கெவின்ராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களின் தகவலின்படி கடத்தலுக்கு பயன்படுத்திய 2 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.