Monday, April 21, 2025
Home » இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

by MuthuKumar

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளவுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட விசைபடகில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மீனவர்கள் 3 மீனவர்களையும் 1 விசை படகையும் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிவந்ததாக வழக்கு பதிவு செய்து, யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.

இதனை அடித்து ராமேஸ்வரம் அனைத்து மீனவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து நாளை 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையோரங்களில் நங்கூரமிட்டு நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதன் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் சூழல் நிலவுகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi