Sunday, July 20, 2025
Home மாவட்டம்சென்னை விளையாட்டு பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம்: தெற்கு ரயில்வே புதுமையான *முயற்சி

விளையாட்டு பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம்: தெற்கு ரயில்வே புதுமையான *முயற்சி

by Neethimaan

சென்னை: விளையாட்டு பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.வேளச்சேரி சென்னை கடற்கரை இடையிலான பறக்கும் ரயில் சேவையை வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள மடிப்பாக்கம் பள்ளிக்கரணை மேடவாக்கம் கோவிலம்பாக்கம் கீழ்க்கட்டளை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பயணிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ரயில் நிலையத்தில் ஒரு புதுமையான உள்ள விளையாட்டு அரங்கம் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி ஆரோக்கியம் பொழுதுபோக்கு மற்றும் வருவாய் ஈட்டுதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பயன்படுத்தப்படாத ரயில் நிலைய இடத்தை உயிரோட்டமுள்ள உடற்பயிற்சி மற்றும் சமூக ஈடுபாட்டு மையமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த திட்டம் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குவதோடு ரயில்வேயின் நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கு பங்களிக்கும். வேளச்சேரி ரயில் நிலையத்தில் அமையவுள்ள இந்த உள் விளையாட்டு அரங்கம் பல முக்கிய நோக்கங்களை மையமாகக் கொண்டுள்ளது. தினசரி விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் உடல் நலத்தை மேம்படுத்துதல் தகுதியான பயிற்சியாளர்களை ஈடுபடுத்தி பல்வேறு விளையாட்டுகளில் தொழில்முறை பயிற்சி வழங்குதல்.

பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு ஈர்க்கக்கூடிய நடவடிக்கைகளை வழங்குதல். பயன்படுத்தப்படாத ரயில் நிலைய இடங்களைப் பயன்படுத்தி கூடுதல் வருவாயை உருவாக்குதல். நவீன உயிரோட்டமான மற்றும் பயணிகளை மையமாக கொண்ட ரயில் நிலையங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுக்காக கட்டமைக்கப்படுகிறது. இந்த உள் விளையாட்டு அரங்கம் மற்றும் வெளிப்புற விளையாட்டுகளுக்கான பலவகையான வசதிகள் இருக்கும். இதில் பேட்மிண்டன் டேபிள் டென்னிஸ் ஜிம்னாஸ்டிக் கூடைப்பந்து கைப்பந்து ஆகிய விளையாட்டுக்கான மைதானம் அடங்கும்.மேலும் பல விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வசதிகளை ஒப்பந்ததாரர் நிர்வகித்து பராமரிப்பார் இதனால் தினசரி பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். தகுதியான பயிற்சியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை ஈடுபடுத்துவது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இது பயிற்சியின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இந்திய ரயில்வேயின் மின்னணு கொள்முதல் தளமான (www.ireps.gov.in) மூலம் திறந்த மின்னஞ்சல் ஏலம் வழியாக ஒப்பந்தமாக வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள ஏலதாரர்கள் முழு விவரங்கள் ஏல அட்டவணை மற்றும் பங்கேற்பு வழிகாட்டுதல்களை இந்த தளத்தில் பெறலாம். வேளச்சேரி ரயில் நிலையம் இனி ஒரு போக்குவரத்து மையமாக மட்டுமல்லாமல் உடற்பயிற்சி மற்றும் சமூக ஈடுபாட்டிற்கான ஒரு மையமாகவும் மாறும்.இந்த விளையாட்டு அரங்கம் வேளச்சேரி பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் குடும்பங்கள் மற்றும் பயணிகள் இந்த வசதிகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கு இது ஒரு தளமாக அமையும்.

மேலும் இந்த முயற்சி ரயில்வே நிலையங்களை மக்களுக்கு நெருக்கமான நவீனமான இடங்களாக மாற்றுவதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்.வேளச்சேரி ரயில் நிலையத்தில் உருவாக்கப்படவுள்ள இந்த உட்புற விளையாட்டு மையம் சென்னை கோட்டத்தின் தெற்கு ரயில்வேயின் முன்னோடி முயற்சியாகும். இது ஆரோக்கியம் பொழுதுபோக்கு மற்றும் சமூக ஈடுபாட்டை ஒருங்கிணைத்து ரயில் நிலையங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வே தனது பயணிகள் மற்றும் சமூகத்திற்கு மேலும் மதிப்பு சேர்க்க முயல்கிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi