Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

திருவிடைமருதூர் - மகாலிங்கேஸ்வரர்

அரசன் வரகுண பாண்டியன் ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கவே அரண்மனையை நோக்கி வேகமாகப் பயணித்தான். வழியில் அந்தணன் ஒருவன் உறங்கிக்கொண்டிருப்பது தெரியாமல் குதிரையின் கால்குளம்பில் மிதிபட்டு இறந்து போனான். அவன் அறியாமல் இது நடந்திருந்தாலும் அந்தணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் மன்னன் வரகுணபாண்டியனுக்கு ஏற்பட்டது. அந்த அந்தணனின் ஆவியும் அரசனைப் பற்றிக் கொண்டது. மதுரை சுந்தரேசரை மனமுருகி வேண்டினான் மன்னன். சுந்தரர் கடவுள் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்குள்ள தன்னை வழிபட்டால் சாப விமோசனம் ஏற்படும் என்றார். எதிரி நாடான சோழநாட்டிற்கு எப்படி செல்வது என கவலைபட்டுக்கொண்டிருந்தான்.

அச்சமயம் சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனை திருவிடைமருதூர் வரை துரத்திச் சென்று அங்குள்ள ஆலயத்தினுள் நுழைந்தான். மன்னனை பற்றியிருந்த அந்தணன் ஆவியும் கோயிலுக்குள் நுழையாமல் மன்னனை விட்டு வெளியேறியது. மன்னன் இறைவனை வழிபட்டு கோயிலின் மறுவாயில் வழியாக வெளியேறும்படி அவனுக்கு அசரீரியாக கேட்கவே, மேற்கு வாயில் வழியாக மன்னன் வெளியேறினான். இவ்வாறு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியவனாக பாண்டியநாடு நோக்கி பயணித்தான். இன்றும் அதே பாரம்பரியப் பழக்கத்தை கோயில் வந்து வழிபடும் பக்தர்கள் பின்பற்றுகிறார்கள்.

இந்தியாவில் மூன்று சிவாலயங்கள் மட்டுமே மருதமரம் தல விருட்சமாக உள்ளது. ஆந்திாரவில் உள்ள கர்னூல் அருகே உள்ள மல்லிகாரனன் கோயில், இரண்டாவதாக திருவிடை மருதூர் கோயில், மூன்றாவது புடார்சுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு திருநெல்வேலிக்கு அருகே (அம்பாசமுத்திரம்)அருகில் உள்ள திருப்புடைமருதூர் ஆகும். திருவிடைமருதூரில் உள்ள தெய்வங்களுக்கு (மகாலிங்கேஸ்வரர் - சுந்தரகுஜாம்பிகை) சூரியன், செவ்வாய், குரு, சுக்ரன், சனி, ராகு ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன.

*ஜாதகத்தில் வியாழன் - சனி சேர்ந்திருந்தாலும் அல்லது வியாழன் - சனி பார்வையிருந்தாலும் அது பிரம்மஹத்தி தோஷம் ஆகும். இவர்கள் பெளர்ணமி அன்று ரோகிணி நட்சத்திர நாளில் இத்தலத்தின் கிழக்குவாசல் வழியாகச் சென்று சுவாமி மற்றும் அம்பாள் தரிசனம் செய்து மேற்கு வாசல் வழியாக வெளியே வந்தால் பிரம்ம ஹத்தி தோஷம் அல்லது ஏவல், பில்லி - சூனியம் என்று நம்பப்படுகின்ற தோஷங்களிலிருந்து விடுபட்டு சுபிட்ஷம் பெறுவார்கள்.

*யாரேனும் அசுப தொடர்புகளாலும், பில்லி, சூனியம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பினால், அமாவாசை நாளிலே அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் கிழக்கு வாசல் வழியே சென்று சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு அம்பாளையும் தரிசனம் செய்து மேற்கு வாசல்வழியாக வந்தால் இந்த பிரச்னையிலிருந்து விடுபடுவார்கள்.

*இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக தன்னைத்தானே அர்சித்து வழிபடுவதால், சப்தரிஷிகளும் முனிவர்களும் இங்கு வந்துஅருள் பெற்ற தலமாகும். ஆகவே, பிஎச்டி, ஆராய்ச்சி கல்வி பயில்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

*நீண்ட நாட்களாக பூப்படையாத பெண்கள் இங்கு வந்து சுவாமிக்கு குங்குமப்பூவால் அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டு அபிஷேக தீர்த்தத்தை வீட்டிற்கு கொண்டு வந்து அருந்தினால் விரைவில் நல்ல பலன் கிட்டும். பாடல் பெற்ற திருத்தலங்களில் இதுவும் சிறப்பான தலமாகும்.