தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆரூர் அரநெறி அசலேஸ்வரர் ஆலயம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: போஜேஸ்வர் ஆலயம், போஜ்பூர், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 32கிமீ தொலைவு.

காலம்: பொ.யு. 1010-1055, போஜராஜ மன்னர்

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே அதிகளவிலான சிற்றாலயங்களைக் கொண்ட பெரும் கோயில் வளாகமாகும். இக்கோயில் வளாகம், அதன் மேற்கே ‘கமலாலயம்’ குளத்துடன் சுமார் 33 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

இவ்வளாகத்தின் தெற்குப்புறத்தில் அமைந்துள்ள அசலேஸ்வரர் கோயில், அப்பரால் பாடல் பெற்ற பெருமை பெற்றது.சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகள் நாயனார், தண்ணீர் கொண்டு கோயில் விளக்கை ஏற்றிய சிறப்பு வாய்ந்த தலம் ‘ஆரூர் அரநெறி அசலேஸ்வரர் கோவில்’ என்றழைக்கப்படும் இவ்வாலயம் ஆகும்.

சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர்விட்டு எழுந்தது அது நோக்கி

ஆதி முதல்வர் அரநெறியார் கோவில் அடைய விளக்கு ஏற்றி

ஏதம் நிறைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன்

நாதர் அருளால் திருவிளக்கு நீரால்

எரித்தார் நாடு அறிய’சேக்கிழார் - பெரிய புராணம்.

சிவ பெருமான் ‘அசலேஸ்வரர்’ என்ற பெயரில் வணங்கப்படுகின்றார். இறைவி: வண்டார் குழலி அம்மன்.இக்கோயில் செம்பியன் மகாதேவியால் கற்கோயிலாகப் புனரமைக்கப்பட்டதாக முதலாம் ராஜராஜன் காலக் கல்வெட்டு பதிவு செய்கிறது. ஆதித்த சோழன்-I (பொ.ஆ.884), பராந்தக சோழன்-I (பொ.ஆ.939), இராஜராஜ சோழன்-I, ராஜாதி ராஜன் மற்றும் விக்ரம சோழன் ஆகிய சோழ மன்னர்கள் வழங்கிய பல்வேறு கொடைகள் மற்றும் மானியங்கள் குறித்த கல்வெட்டுகள் இந்தக் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இக்கோயில் புறச்சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள கோஷ்டச்சிற்பங்களின் பேரழகு காண்போரைக் கவர்ந்திழுக்கும்.அமைவிடம்: ஆரூர் அரநெறி அசலேஸ்வரர் ஆலயம், தியாகராஜர் கோயில் வளாகம். திருவாரூர்.

மது ஜெகதீஷ்