தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆச்சரியமான பாலம்

Advertisement

தெய்வத்திடம் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்த அடியார்கள், எந்தவிதமான மான - அவமானங்களையும் பொருட்படுத்த மாட்டார்கள். தங்கள் உடல், பொருள், ஆவி எனும் மூன்றையும் தெய்வத்திற்கே அர்ப்பணித்தவர்கள் அவர்கள். அவர்களிலும் ஆசார்ய புருஷர்கள் பலர், ஆச்சரியகரமான செயல்களைச் செய்து வழி காட்டியிருக்கிறார்கள். குருநாதர் ஒருவர். அவரிடம் பல ஆண்டுகளாகப் பணிவிடை செய்து வந்தார் சீடர் ஒருவர். குருநாதரின் மனைவி காலமாகி விட்டதால், குருநாதரின் பெண் குழந்தைகள் இருவரையும் சீடர் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்துப் பராமரித்து வந்தார்.

ஒருநாள்... குருநாதரின் பெண் குழந்தைகள் இருவரும் நீராடப் போனார்கள். சீடரும் போனார். நீராடி முடிந்து திரும்பும்போது, வழியில் சேறு நிறைந்த சிறு வாய்க்கால் ஒன்று குறுக்கிட்டது. சேறும் சகதியுமாக இருந்த அதைப் பார்த்ததும், பெண் குழந்தைகள் இருவரும் தயங்கினார்கள். அதைப் பார்த்தார் சீடர்; விநாடி நேரம்கூட யோசிக்க வில்லை; ‘‘குருவின் குழந்தைகளே! என் முதுகின் மேல் ஏறிப் பாதிப்பில்லாமல், வாய்க்காலின் மறுகரையை அடையுங்கள்!’’ என்று சொல்லிவிட்டு, சேறும் சகதியும் நிறைந்த அந்தச் சிறு வாய்க்காலின் குறுக்காக, அப்படியே குப்புறப் படுத்துவிட்டார், சீடர். பாலம் போலப் படுத்துக்கிடந்த அந்தச் சீடர் முதுகின் மேல் நடந்து, எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் வாய்க்காலைக் கடந்து, வீடு போய்ச் சேர்ந்தார்கள் குருவின் பெண் குழந்தைகள் இருவரும்.

வீட்டிற்குப் போனதும், சீடர் தன் உடலில் படிந்திருந்த சேறு போக, நீராடச் சென்றார். விவரமறிந்த குருநாதருக்கு மெய் சிலிர்த்தது; உடனே சீடரை அழைத்து, ‘‘உமக்கு யாம் செய்ய வேண்டுவது என்ன?’’ என்று கேட்டார்.‘‘தங்கள் திருவடிச் சேவையே அடியேன் வேண்டுவது’’ என்றார் சீடர். குருநாதர் சொல்லத் தொடங்கினார்; ‘‘இனிவரும் எதிர்காலத்தில், யமுனைத்துறைவர் என்று அழைக்கப்படும் மந் நாதமுனிகளின் பேரனுக்குத் தகுந்த காலத்தில் உபதேசங்களைச் செய்யும்!’’ என்றார் குருநாதர்.சீடரும் அப்படியே நடந்து கொண்டார். குருநாதர் திருநாமம் - உய்யக்கொண்டார். சேற்றில் பாலமாக இருந்து, குருநாதரின் பெண்குழந்தைகளுக்கு உதவி செய்தவர் குரு பக்தியில் சிறந்த, மணக்கால் நம்பி.

பி.என்.பரசுராமன்

 

Advertisement

Related News