Thursday, March 28, 2024
Home » ஆன்மிகம் பிட்ஸ்: மண்டோதரி

ஆன்மிகம் பிட்ஸ்: மண்டோதரி

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தியாகேசர் தீபங்கள்: தியாகேசர் சந்நதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் இருந்து காலத்தின் நாயகனை பெருமானை வழிப்பட்டு கொண்டிருக்கின்றன. நவக்கிரகங்கள் அடங்கி ஒரே வரிசையில் உள்ளன.

காஞ்சி மறை நூபுரம்: வேதசிலம்பு: இங்கு யுகம் முடிவில் வேதங்கள் வழிபட்டு, சிவனுக்கு கால் சிலம்பாயின. பிரம்ம தேவனுக்கு சிவன் தூக்கிய காலை அசைத்து ஒலிமூலம் வேதங்களை உபதேசித்த தலம்.

கருவறையில் ஜன்னல்: பெண்ணாகடம், காஞ்சி ஜுரஹரரேஸ்வரர் கருவறைகோட்டங்களில் ஜன்னல்கள் உள்ளன. நாற்புறமும் இருந்தும் பெருமானை தரிசனம் செய்யலாம்.

ருத்திரர்கள்: சிவபுராணம், உலகப் படைப்பிற்கு உதவியாக இருக்கும் பொருட்டு பிரம்மனின் நெற்றியில் இருந்து சிவன் பதினோரு ருத்திரர்களை
படைத்தார்.

காப்பும் கங்கணமும்: காப்பு, தான் மேற்கொள்ளும் செயலுக்கு தீய சக்திகளால் உண்டாகும் தொல்லைகளை விலக்க அணிவது. கங்கணம், நாம் எடுக்கும் செயலில் நிலைத்து நின்று அதனை சிறப்புற செய்து முடிக்க மேற்கொள்ளும் உறுதிக்காக.

மண்டோதரி: இராவணன் மனைவி ஓயாது ஐந்தெழுத்தை ஓதும் மகாசிவபக்தி உடையவள். தாம் எப்போது விரும்புகின்றாளோ அப்போது ஈசன் தனக்கு காட்சி அளிக்க வரம் பெற்றிருந்தாள்.

ஒன்றுக்குமேற்பட்ட தலமரம்: இன்னம்பர்-2, ஒற்றியூர்-3, வேதாரண்யம்-12, திருக்கடவூர்-2, திருவெண்காடு-3, வைத்தீஸ்வரன் கோயில்-4, திருபுனவாயில்-4, பஞ்சவடி-5, ஸ்ரீசைலம்-6, நீலகுடி-6.

இடைக்கட்டுகோபுரம்: மதுரை, நெல்லை அம்பிகை ஆலயமும் சுவாமி ஆலயமும் அடுத்தடுத்து தனித்தனி சுற்று பிரகாரங்களுடன் தனிதனி வாயில்களுடன் வாயில் மீது பெரிய ராஜகோபுரம்
இருப்பது.

மரமும் தெய்வமும்: அரசமரமும் மும்மூர்த்தி வடிவம் விநாயகரோடு தொடர்புடையது. ஆலமரம் சிவன் வடிவம்; பொதுவுடையார் கோயிலில் ஆலமரமே நடராஜராக வழிபாடு. வேம்பு – பராசக்தி வடிவம். வேங்க, கடம்பு – முருகன் வடிவம்.

பாண்டி கொடுமுடி: அகத்தியர் தழுவி மகிழ்ந்த விரல் அடையாளம் லிங்க திருமேனியில் உள்ளன. இங்கு சிவன் உமா, திருமண காட்சி அகத்தியருக்கு காட்டினார்.

செடியின் பெயரில் ஊர்: கச்சி நெறிக்காரைக்காடு, காரைக்காட்டில் இந்திரன் தவம் செய்தபோது சுயம்பு லிங்கமாக ஈசன் தோன்றி அருள்புரிதல். சத்யவிரதநாதர் என்பர். இதேபோல் காரைக்கால், காரைக்குடி, காரைசெடியின் பெயரால் உண்டான ஊர்.

பிரம்மஹத்தி: பிரம்மத்தை உணர்ந்து பரமஞானிகளாக விளங்கும் பெரியோர்களை அவமதித்து, அவர்களை துன்புறுத்தி கொன்றுவிட்டால், கொன்றவர்களை கொடிய அரக்கன்வடிவில் அவர்களை துன்பம் பிடித்து தொடர்ந்து வந்து துன்புறுத்தும்.

பேரூர் (கோவை): திருமாலும் பிரம்மனும் முறையே பட்டிமுனி, கோமுனி பெயரில் தவம் செய்து சிவன் நடனகாட்சி காண்கிறார்கள் (கோமுனி-பசுமுகம்-பிரமன்).

ஆரூர்: மகாலட்சுமி, தவம் செய்து திருமாலை மணந்து லட்சுமீசர், உமை சிவனை வழிபட்டு பார்வதீஸ்வரர் பெயரில் லிங்கம் அமைத்து, சரஸ்வதி பிரம்மனை அடைந்து சரஸ்வதீஸ்வரர் பெயரில் லிங்கம் உள்ளன.

திரையில் பீமருத்திரர்: திருமால் வாமன அவதாரம் செய்து, சிவ பக்தனான மகாபலியை பாதாளம் அழுத்திய பாவம் தீர, லிங்கம் அமைத்து பூஜையும், அதை காக்க முன்புறம் திரையில் பீமசங்கரராக உருவம் அமைந்து உள்ளது.

நாகூர்: 1 நாரை கொண்டு வந்துவிட்ட புன்னை கொட்டையிலிருந்து 7 நாழிகை அளவில் பெரிய புன்னைமரம் தோன்றி அதன்கீழ் சிவலிங்கமாக தோன்றி அதை நாகர்கள் வழிபட்டதால் நாகநாதர் எனப்பட்டார். அம்பிகை நாகவல்லி.

மதில் சிறப்பு பெயர்: மதுரை, 1 மதில் காபாலி, திருவண்ணாமலை – வீரராகவன் திருமதில் வாணதிராயன் திருமதில், ஏகம்பமுடையான் திருமதில்

தொகுப்பு: அருள்ஜோதி

You may also like

Leave a Comment

twenty + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi